செய்திகள்
Trending

உயிரிழந்த நபருக்கு 2வது டோஸ் தடுப்பூசி : குறுஞ்செய்தியால் அதிர்ச்சி!!

உயிரிழந்த நபருக்கு 2வது டோஸ் தடுப்பூசி : குறுஞ்செய்தியால் அதிர்ச்சி!!

முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு உயிரிழந்த நபர், 2ஆவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக குறுஞ்செய்தி வந்திருப்பது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். தடுப்பு செலுத்தி கொண்டே நான்கு நாட்களிலேயே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.தொற்று ஏற்பட்டவுடன் அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் 15ஆம் தேதி உயிரிழந்தார். அவர் பயன்படுத்திய கைப்பேசி தற்போது அவரது மகனிடம் உள்ளது.இந்நிலையில் தற்போது செல்வராஜ் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக அவருடைய கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.செல்வராஜுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக விபரங்களுடன் வந்த குறுஞ்செய்தி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் எங்கே தவறு நடந்தது என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கொரோனாதடுப்பூசி #கொரோனா #CoronaVaccine

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button