செய்திகள்

குடித்துவிட்டு புலம்பிய கணவனை கழுத்தை இறுக்கி கொலைசெய்த இளம்பெண்!!

குடித்துவிட்டு புலம்பிய கணவனை கழுத்தை இறுக்கி கொலைசெய்த இளம்பெண்!!

தூத்துக்குடி தாளமுத்துநகர் அட்டகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், கூலி தொழிலாளி. இவருக்கு  திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும்  ஒரு மகனும்,  ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு அவர் குடித்து விட்டு வீட்டில் மனைவியுடன் தகறாரில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி சுப்புலட்சுமி, கணவரை சத்தம் போடாமல் இருக்கச் சொல்லி மிரட்டியுள்ளார். ஆனாலும் ஆறுமுகம் தொடர்ந்து புலம்பி தீர்த்ததை தாங்கமுடியாத அவர், போர்வை துணியை கொண்டு ஆறுமுகத்தின் கழுத்தை சுற்றி  இறுக்கியதாக கூறப்படுகிறது. இதன்பின் ஆறுமுகம் மயங்கிவிட்டார்.இந்நிலையில், காலையில் ஆறுமுகத்தை தட்டிஎழுப்பும் போது அவர் அசைவற்று கிடந்ததை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலையத்துக்கு சுப்புலட்சுமி தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆறுமுகத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆறுமுகம் ஏற்கனவே  இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,  ஆறுமுகத்தின் மனைவி சுப்புலட்சுமியிடம்  கணவர் இறந்தது குறித்து விசாரணை நடத்தினார்.மேலும், மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

செய்திகள் : மாரிராஜ், தூத்துக்குடி

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தூத்துக்குடி #கிரைம் #Crime

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button