ஆன்மீகம்

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி : மக்கள் அனுமதி மறுப்பு

சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.

கடந்த ஆண்டை போல பக்தர்களுக்கு அனுமதில்லை அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா கடந்த 4 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுபாடுகளுடன் இந்த திருவிழா நடந்து வந்தது. 4 தேதி முதல் 8 தேதி வரை தினமும் 5 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமாகவும், 5 ஆயிரம் பேர் நேரடியாகவும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சூரசம்ஹாரம், நாளை நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதில்லை. சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கடந்த ஆண்டை போல பக்தர்களின்றி கோவில் கடற்கரையில் நுழைவாயில் நடந்தது. இதற்காக 300 அடி சதுர பரப்பளவில் மூன்று பக்கமும் தகர செட் அமைக்கப்பட்டது. மேலும் மூன்று தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்த சூரசம்ஹார நிகழ்வையொட்டி.. இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து யாகசாலை மண்டபத்தில் காலை 7.மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. அதனையடுத்து அலங்கார தீபாராதனை நடந்து சப்பரத்தில் எழுந்தருளி 108 மகாதேவர் மண்டபம் வந்தார். பின்னர் மதியம் 2 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. இதனையடுத்து சுவாமி ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதின மண்டபம் வந்தடைந்தார் தீபாராதனை நடந்தது. இதனையடுத்து மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமி ஜெயந்திநாதர், யானை முகம் கொண்ட தாரகாசுரன், சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். பின்னர் தன் முகம் கொண்ட சூரபத்மனை வதம் செய்தார். தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த சூரபத்மனை வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி சுவாமி ஜெயந்திநாதர் ஆட்கொண்டார். நாளை இரவு 108 மகாதேவர் சன்னதியில் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.இதற்காக சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் சோதனைசாவடி அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வந்தனர். பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடைபெறுவதால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. சூரசம்ஹாரத்தை நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திருச்செந்தூர் #சூரசம்ஹாரம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button