சினிமாசெய்திகள்
Trending

சூர்யாவை உதைக்க சொன்னவரை உதைங்க, நான் தரேன் காசு !! சீமான்

நடிகர் சூர்யாவை உதைக்க சொன்னவரை உதைங்க நான் காசு தரேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்புமணி எழுதிய கடிதத்தில் காவல் ஆய்வாளர் அந்தோணிசாமி கதாபாத்திரத்தின் பெயரை ஏன் மாற்றினீர்கள் என்று கேட்கிறார். அதேபோல, படத்தில் இடம்பெற்ற வன்னியர் சங்க அடையாளம் யாருக்கும் தெரியாமல் வைத்திருக்க முடியாது என்றார்.

அது வன்னியர் சங்க குறியீடு என்பது உலகத்துக்கே தெரியும். அதனை தவிர்த்திருக்கலாம். நான் படம் பார்க்கும்போது எனக்கு எதுவும் தோன்றவில்லை. இல்லையென்றால் சூர்யா தம்பியிடம் ‘எடுத்திடலாமே’ என்று சொல்லியிருப்பேன் என்று கூறினார்.

குறிப்பிட்ட சமூக மக்களின் வலியை எடுத்து இன்னொரு சமூகத்துக்கு வலியை ஏற்படுத்தக்கூடாது என்பது தனது கருத்து என்று கூறிய சீமான், அதேபோல, எட்டி உதைப்பறதுக்கு சூர்யா செந்திலா என்ன? அந்த மாதிரியெல்லாம் பதிவிடக்கூடாது என கூறியுள்ளார்.

சூர்யா குடும்பத்தை எனக்கு நல்லாத் தெரியும். எந்த பிரச்னைக்கும் தீர்வுகாணத்தான் நினைப்பார்கள். புதிய பிரச்னையை உருவாக்கமாட்டார்கள். தேவையில்லாமல் அவரை உதையுங்க.. மிதியுங்க என்கிறார்கள்.

அப்படி பதிவு போட்டவரை வேண்டுமென்றால் உதையுங்க. மிதியுங்க. நான் காசு கொடுக்கிறேன் என்று சீமான் சிரித்தபடி கூறியுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button