அரசியல்
Trending

அ.ம.மு.க வேணுமா? வேணாமா?சசிகலா – தினகரன் போட்டா போட்டி

அ.ம.மு.க வேணுமா? வேணாமா?
சசிகலா – தினகரன் போட்டா போட்டி

அ.தி.மு.க வில் தன்னை இணைத்துக் கொள்ளும் முயற்சியில் சசிகலா தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், அ.தி.மு.க வின் பொதுச் செயலாளர் என தன்னை
தானே அறிவித்துக் கொண்டு அ.தி.மு.க தொண்டர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அ.ம.மு.க என்று தனியாக தினகரன் கட்சி நடத்துவது சசிகலாவிற்கு பிடிக்கவே இல்லை. மேலும், அ.ம.மு.க வை கலைத்துவிட்டு அ.தி.மு.க விற்கு ஆதரவை கொடுக்க வேண்டும் என்று சசிகலா, தினகரனுக்கும் அ.ம.மு.க வைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவருக்கும் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் அ.தி.மு.க வை மீண்டும் கைப்பற்ற நினைக்கும் சசிகலாவின் நிலைப்பாடு தினகரனுக்கு பிடிக்கவில்லை. தினகரனுக்கு சசிகலா அ.ம.மு.க.வின் தலைவராக செயல்பட்டு வழிநடத்த வேண்டுமென்று விரும்புகிறார். ஆனால் சசிகலா அ.தி.மு.க வை கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக சசிகலா மற்றும் தினகரன் இருவருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்த கருத்து வேறுபாடுகளுக்கு இடையே அ.ம.மு.க நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் சில முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் சசிகலாவின் வீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றுள்ளனர். அவ்வாறு சென்ற அவர்கள் சசிகலாவுடன் சேர்ந்து பயணிக்க விரும்புவதாக தெரிவித்தனர். இந்நிலையில் சசிகலா அ.ம.மு.க கட்சியை கலைத்துவிட்டு தினகரன் உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தன்னுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தினகரன் தரப்பில் உதவியாளர் ஒருவர், பூந்தமல்லி முன்னாள் எம்.எல்.ஏ உட்பட கட்சி நிர்வாகிகள் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், நீங்கள் ஏன் சசிகலா வெளியில் செல்லும்போது அவருடன் சென்றீர்கள்? என்று கேட்டதற்கு கட்சி நிர்வாகிகள் சசிகலாவிற்கு பாதுகாப்பு அளிக்க சென்றோம் என்று கூறியுள்ளனர். இவ்வாறு கட்சி நிர்வாகிகள் பதில் கூறியதால் தினகரன் தரப்பு உதவியாளர் அதற்கு மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதி தர வலியுறுத்தி உள்ளார். அதற்கு கட்சி நிர்வாகிகள் நீங்கள் கடிதம் வாயிலாக விளக்கம் கேட்டால், நாங்களும் சசிகலாவிடம் கேட்டு விளக்கம் எழுதி தருகிறோம் என்று பதிலளித்துள்ளனர். இதனால் கருத்து மோதல்கள் ஏற்பட்டன.

இந்த சூழ்நிலையில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சசிகலா நிவாரணப் பொருள்களை நேரில் சென்று வழங்கினார். சசிகலாவின் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த தினகரன் தரப்பினர் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை பெசன்ட் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தும் வகையில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அ.ம.மு.க நிர்வாகியை தினகரன் தரப்பினர் கடத்தியதாக கூறப்படுகிறது.

இவ்வாறு தினகரன் மற்றும் சசிகலா விற்கு இடையே ஏற்படும் மோதல்களினால் பாதிக்கப்படுவது கட்சி நிர்வாகிகள் மட்டுமே என்று கட்சி தரப்பினர் திணறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கட்சி நிர்வாகிகள் யார் பக்கம் நிற்க வேண்டும் என்று தெரியாமல் திண்டாடி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button