செய்திகள்
Trending

“இரண்டு பொட்டு, இரண்டு புருஷனா??” மாணவிகளிடம் அரசு ஆசிரியரின் பாலியல் சீண்டல்கள்!!

“இரண்டு பொட்டு, இரண்டு புருஷனா??” மாணவிகளிடம் அரசு ஆசிரியரின் பாலியல் சீண்டல்கள்!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரசு பள்ளியில் மாணவியிடம் தவறாக நடந்ததாக மாணவியின் பெற்றோர் ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பள்ளி வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் நடுக்குப்பம் சுற்றுவட்டார பகுதியான வண்டிப்பாளையம், நாணக்கல்மேடு வண்டிப்பாளையம், புதுப்பாக்கம், கே என் பாளையம், திருக்கனூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாணவ மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.நடுக்குப்பம் மேல்நிலைப்பள்ளியில் பழனிவேல் என்பவர் வணிகவியல் ஆசிரியராகவும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

இச்சூழலில் பள்ளியில் உள்ள பெண் பிள்ளைகள் நெற்றியில் பொட்டு வைத்து வருவதை பார்த்து பலமுறை இவர் கண்டித்திருக்கிறார். நீங்கள் எல்லாம் போட்டு வைக்கக்கூடாது என ஆசிரியர் பழனிவேல் கூறியுள்ளார். இந்த நிலையில் நடுக்குப்பம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பயின்று வரும் ஒரு மாணவி இன்று வீட்டில் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

எதற்கு என்று பெற்றோர்கள் விசாரிக்கையில் ஆசிரியர் செய்த சீண்டல்களை கூறியிருக்கிறார்.

அந்த மாணவி : எங்களுக்கு பாடம் நடத்தி வரும் வணிகவியல் ஆசிரியர் பழனிவேல் என்பவர் என்னிடம் வந்து நான் நெற்றியில் வைத்திருக்கும் பொட்டை பார்த்து அந்த ஆசிரியர், உனக்கு ஒரு பொட்டு இருந்தால் ஒரு புருஷன் இரண்டு போட்டு வைத்திருக்கிறாய் உனக்கு என்ன இரண்டு புருஷனா?? என கூறி என்னை உடம்பில் தவறான முறையில் தொட்டார். எனக்கு பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு மாணவியை அழைத்து வந்தனர். சம்பவம் குறித்து அசுரகுலம் பெற்றோர்கள் தெரிவித்தனர். புகாராக எழுதி சம்பந்தப்பட்ட உதவி தலைமையாசிரியர் பழனிவேலை வேலை இடமாற்றம் செய்ய வேண்டும் மற்றும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என புகார் அளித்தனர்.

இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதைதொடர்ந்து அப்பகுதியில் இருந்த மக்கள் மற்றும் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு வரத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

மரக்காணம் வட்டாட்சியர் மற்றும் கோட்டகுப்பம் காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button