செய்திகள்

குழந்தையுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை!!

குழந்தையுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை!!

திருமங்கலம் அருகே ஒரு வயது குழந்தையுடன், தாய் கிணற்றில் விழுந்து பலி

மதுரை திருமங்கலம் தாலுக்கா திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன்- மாரீஸ்வரி (26) இருவருக்கும் திருமணமாகி சில ஆண்டுகளே ஆன நிலையில் இவர்களுக்கு ஒரு வயதான கனிஷ்கா ஸ்ரீ என்ற மகள் உள்ளது.

இந்த நிலையில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படுவதாகும் நேற்று ஏற்பட்ட குடும்பத் தகராறில் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இதனால் மாரீஸ்வரி தனது ஒரு வயது குழந்தையுடன் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு துறையினர் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் : நீதிராஜன், மதுரை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button