செய்திகள்

ஜாவத் புயல் எதிரொலி : கரையிலே காத்திருக்கும் பைபர் மற்றும் விசை படகுகள்

ஜாவத் புயல் எதிரொலி : கரையிலே காத்திருக்கும் பைபர் மற்றும் விசை படகுகள்….

ஜாவத் புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை ; ஆயிரக்கணக்கான பைபர் மற்றும் விசைப்படகுகள் கரையோரங்களில் நிறுத்தம்

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தால் மழை ஓய்ந்ததை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் அந்தமான் வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள ஜாவத் புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக நாகை, நாகூர், செறுதூர், கள்ளார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு துறைமுகங்களில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5000க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

செய்திகள் : ச.ராஜேஷ், நாகை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button