செய்திகள்

ஆத்தி !! எத்தன கோடி !! வசமாக சிக்கிய சரவணா ஸ்டோர்ஸ்

ஆத்தி !! எத்தன கோடி !! வசமாக சிக்கிய சரவணா ஸ்டோர்ஸ்….

தமிழகத்தின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்று சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்.சரவணா ஸ்டோர் நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 37 இடங்களில் டிசம்பர் 1ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை வருகின்றனர்.
இந்த சோதனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும், இந்த பணத்தை தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

புரசைவாக்கம், தி. நகர் பகுதிகளில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான பல இடங்கள் குறித்த முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ரூ 1000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது உண்மை தான் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிறுவனம் பல ஆண்டுகளாக விற்பனையை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்துள்ளது. சுமார் ரூ 150 கோடி மதிப்பில் கணக்கில் வராத ஆடைகள், நகைகள் வாங்கப்பட்டுள்ளன. மேலும் ரூ 80 கோடி மதிப்பில் போலி பில்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. கணக்கில் வராத ரூ 10 கோடி ரொக்கமும், 6 கோடி மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button