செய்திகள்
Trending

சிங்க மாஸ்க் : ஜோஸ்ஆலுக்காஸ் நகை கொள்ளை : வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!!

சிங்க மாஸ்க் : ஜோஸ்ஆலுக்காஸ் நகை கொள்ளை : வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!!

வேலூர் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடையில் துளை போட்டு 30 கிலோ தங்க நகைகள் மற்றும் வைரம் கொள்ளையடிக்கப்பட்டது.

கடையின் பின் பக்க வெண்டிலேட்டர் குழாய் மூலம் புகுந்து பால் சீலிங்கை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் குறித்த தடயங்களை மோப்ப நாய் மற்றும் கைரேகை நிருணர் குழுவினர் உதவியுடன் சேகரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, எஸ்.பி ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வேலூர் மாநகர் பகுதிகளில் உள்ள விடுதிகளில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

நகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்தனர். கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற திசை குறித்து அறிய வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சிம்பா கடையின் பின்புறம் இருந்து கால்வாய் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று வேலூர் பழைய பஸ்சாலையில் நின்றது.

இந்நிலையில் நகைக்கடை கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சி இன்று வெளியானது. சிங்கம் முகம் போன்ற மாஸ்க் அணிந்துகொண்டு கடைக்குள்ளே வரும் நபர் சிசிடிவி கேமராவில் பெயிண்ட் ஸ்பிரே அடிக்கிறார். அது மற்றொரு கேமராவில் பதிவாகியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button