செய்திகள்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு!!

நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் மூன்றாண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது.

இதையடுத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு எப்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி பரவலாக எழுந்த நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடி உத்தரவைத் தொடர்ந்து, விடுபட்ட 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு அண்மையில் தேர்தல் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பே தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி, பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு ஜனவரி மூன்றாவது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button