அவல நிலையில் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக உள் நோயாளியாக ஆய்க்குடியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரது மகன் சாமுவேல் வயது 25 கையில் எலும்பு முறிவிற்காக சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார். கையில் எலும்பு முறிவுக்கான சிகிச்சையில் இருக்கும் போது பரிசோதனைக்காக இவரை வீல்சேரில் ஏற்றி உள்ளார்கள். வீல் சேர் உடைந்து கீழே விழுந்ததில் மீண்டும் தன்னுடைய கையில் அடிபட்டதாக கூறுகிறார். ஏற்கனவே சில தினங்கள் முன்பு ஃப்ரீசர் பாக்ஸ் வேலை செய்யாததால் தண்ணீரில் விழுந்து இறந்த சிறுவன் உடல் அழுகியதாக இதே மருத்துவமனையில் புகார் எழுந்த நிலையில் தற்போது நோயாளியை ஏற்றிய வீல் சேர் உடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்தெகனவே பினவரையில்ன்கா உள்சிள குளிர் சாதனம் வேலை செய்யாமல் ஒரு சிறுவனின் உடல் அழுகிய நிலையில் அவனது பெற்றோர்களிடம் கொடுக்கபட்டது அப்போது பெறும் சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடதக்கது மாவட்டத் தலைநகரான பிறகும் இவ்வாறு அவல நிலையில் உள்ள அரசு மருத்துவமனையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்படுத்த முயற்சி செய்வார்களா