கோக்கு மாக்கு

கடையம் அருகே புதிய மின்மாற்றி திறப்பு

கடையம் அருகே உள்ள இரவணசமுத்திரம் புதிய மின்மாற்றி திறப்பு

இரவணசமுத்திரம் பகுதியில் புதிய மின்மாற்றி திறக்கப்பட்டது.பொதுமக்கள் இதனால் மகிழ்ச்சியடைந்தனர்.

தென்காசி மாவட்டம், கடையம் அடுத்த உள்ள இரவணசமுத்திரம் கிராமத்தில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் கடந்த 15 வருடங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் இருப்பதால் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்க முடியாமலும், விவசாயிகள் மோட்டாரை இயக்கு முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். கிராமத்திற்கு புதிய மின் மாற்றி அமைத்துக் கொடுத்து மின்சார பற்றாக்குறையை போக்க வேண்டுமென இரவணசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் M.முகம்மது உசேன் அவர்களிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இந்த கோரிக்கையை ஏற்ற ஊராட்சி மன்றத் தலைவர் M.முகம்மதுஉசேன் ஆழ்வார்குறிச்சிகோட்ட செயற்பொறியாளர் ( AE ஜீவானந்தம் ) னிடம் மனு கொடுத்ததின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பார்த்தபோது, இரவணசமுத்திரம் கிராமத்தில் இருந்து வீராசமுத்திரம் கிராமம் வரை புதிய மின்கம்பம்கள் நடப்பட்ட பிறகே புதிய மின்மாற்றி அமைக்கமுடியுமென தெரிவித்தனர். இதனையடுத்து கல்லிடைக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அவர்களை அணுகி கிராமத்தின் குறைகளை விளக்கி, புதிய மின்மாற்றியை அமைக்க உத்தரவு பெற்று வந்தார்.இதையடுத்து மின்கம்பங்கள் நடப்பட்டு புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து கிராம மக்கள் மின்மாற்றிக்கு மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர். பல ஆண்டு கால கோரிக்கையான குறைந்த அழுத்த மின்சாரத்தை போக்கிய ஊராட்சி மன்ற தலைவருக்கும், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிஊராட்சி மன்ற தலைவர் M.முகம்மது உசேன் முன்னிலையில் நடைபெற்றது.இதில் அனைத்து வார்டு உறுப்பினர்களானS.ராம லட்சுமி 7வது வார்டு உறுப்பினர்(துணைத் தலைவர்)ஜி. கோமதி 1வது வார்டு உறுப்பினர்எம் .மொன்னா முகமது 2வது வார்டு உறுப்பினர்கே. எஸ் .முகம்மது யஹ்யா3வது வார்டு உறுப்பினர்எம். மெஹருண் நிஷா 4வது வார்டு உறுப்பினர்எஸ். ஜானகிராமன் 5வது வார்டு உறுப்பினர்ஆர் .கனகா 6வது வார்டு உறுப்பினர்M.முகைதீன் அப்துல் காதர் 8வது வார்டு உறுப்பினர்எம். ஜமீலா ஹாத்தூன்9வது வார்டு உறுப்பினர் மற்றும்ஆழ்வார்குறிச்சி உதவி பொறியாளர் AE ஜீவானந்தம் மற்றும் AE லோயர் வாட்ச் விஜயராஜன் EE ராமக்கிளி மற்றும் மின்சார வாரிய பணியாளர்கள் உள்ளிட்ட இரவணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button