திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கருத்தாண்டி பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி ராஜேஸ்வரி வயது 63. இவர் முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கருத்தாண்டி பட்டியில் இருந்து விளாம்பட்டிக்கு வருவதற்காக அவ்வழியாக வந்த குருவித்துறை என்ற ஊரைச் சேர்ந்த இளையராஜா வயது 61. என்பவர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு ஏறி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கருத்தாண்டிபட்டி அடுத்துள்ள காமாட்சிபுரம் பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ராஜேஸ்வரி அரசு பஸ் சக்கரத்துக்குள் விழுந்ததால் தலையில் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து இறந்து போனார். இதன் பின்னர் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் இளையராஜா கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தலை நசுங்கி முன்னாள் சத்துணவு அமைப்பாளர் இறந்து போன சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
க்ரைம்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
விமர்சனங்கள்
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
4 days ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
4 days ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
4 days ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
4 days ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
4 days ago
முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி
4 days ago
களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை
February 3, 2026
மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
February 2, 2026
வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
February 1, 2026
