கோக்கு மாக்கு
Trending

100% வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் பொதுமக்களுக்கு 100% வாக்குப்பதிவை பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒட்டன்சத்திரம் சின்னைய கவுண்டன் வலசில் அமைந்துள்ள அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்துறை இணைந்து ஒட்டன்சத்திரம் நகர்பகுதிகளில் உள்ள திருவள்ளுவர் சாலை, மார்க்கெட் பை பாஸ் சாலை, தாராபுரம் சாலை, பழனி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் காவல்துணைக் கண்காணிப்பாளர் முருகேசன், சார்பு ஆய்வாளர்கள் சவடமுத்து, ரஞ்சித்குமார் மற்றும் NSS ஒருங்கிணைப்பாளர்கள் யசோதா, யமுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button