கோக்கு மாக்கு

*54 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் தெப்ப திருவிழா வருகிற 22ஆம் தேதி(புதன்கிழமை) வைகாசி விசாகத்தன்று மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் நடைபெறுகிறது*

திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலும் ஒன்றாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த திருக்கோவிலில் பண்டைக்காலத்தில் தெப்ப திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. அன்னியர் படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் தெப்பத் திருவிழா நடைபெறுவது தடைபட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 1970 ஆம் ஆண்டு தெப்ப திருவிழாவை நடத்தியுள்ளனர் அதன்பிறகு தெப்பத் திருவிழா நடைபெறவில்லை இந்நிலையில் இந்த ஆண்டு தெப்ப திருவிழாவை நடத்த கோவில் அறங்காவலர்கள் குழு முடிவு செய்து அதற்கான ஒப்புதலை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பெற்றுள்ளனர் அதன்படி வருகிற 22ஆம் தேதி புதன்கிழமை மாலை மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது 54 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நடைபெற உள்ள தெப்பத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button