கோக்கு மாக்கு

கொடைக்கானலில் 10 நாட்களில் திருமணம் நடைபெற  இருக்கும் நிலையில்  மணமகன்   கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் என்ற செல்வம். 34 வயதான இவர் கூலி  வேலை செய்து வருகிறார். இவருக்கு  3 மாதங்களுக்கு முன்பு நிச்சியதாரத்தம் நடைபெற்றது. திருமணத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில்  நேற்று இரவு செல்வம் கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இந்று காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவுகள் திறக்காததால் சந்தேகமடைந்த  உறவினர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்,

இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது  செல்வம் தூக்கிட்டநிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய கொடைக்கானல் காவல்துறையினர்   பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், மணமகன் எழுதிய கடிதத்தில் மன உளைச்சலால் நான் தற்கொலை செய்கிறேன் என்றும் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என எழுதியுள்ளதாக காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சாந் தெரிவித்தார் ,இச்சம்பவம் குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் 

இச் சம்பவம்  அண்ணாநகர் பகுதிமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button