கோக்கு மாக்கு

சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ நா கார்த்திக் செய்தியாளர் சந்திப்பு

கொரோனா ஒழித்த உத்தமரே என போஸ்டர் அடித்து அமைச்சர் வேலுமணி கொரோனா தொற்றை கட்டுபடுத்த தவறிவிட்டார்.எம்.எல்.ஏ நா.கார்த்திக் பேட்டி

கோவையில் வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது எனவும், இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் கோவையில் தினமும் 10 முதல் 12 பேர் உயிரிழக்கின்றனர் எனவும், கோவை மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு தான் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க காரணம் எனவும் அவர் கூறினார்.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் அதிமுக அரசு தோல்வியடைந்துள்ளது எனவும் கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை அரசு மூடி மறைக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட வேண்டும் எனவும் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை எனவும் இஎஸ்ஐ மருத்துவமனையில் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லை என அவர் குற்றம்சாட்டினார். மேலும் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு,மருந்துகள் தருவதில்லை எனவும் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் 15 நாட்களுக்கு ஒரு முறை சோதனை தொழில் நிறுவனத்தினர் மற்றும் வணிகர்கள் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என உள்ளாட்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் பொருளாதார பாதிப்பால் சிக்கி தவிக்கும் நிலையில் அந்நிறுவனங்கள் பரிசோதனை செய்ய முடியாது எனவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button