கோக்கு மாக்கு

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பல்வேறு முக்கிய தளர்வுகளுடன் 8-வது முறையாக ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை அமலில் உள்ளது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மக்களின் பயன்பாட்டுக்கு பெரிதும் உதவும் பேருந்து போக்குவரத்து அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த முக்கிய தளர்வுகளில் ஒன்றாக மாவட்ட எல்லைகளுக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று முதல் மாவட்ட எல்லைகளுக்குள் பேருந்துகள்க இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 161 நாட்களுக்கு பின் பேருந்துகள் மீண்டும் இயங்க தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது

மாவட்ட எல்லை வரை உள்ள பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அடுத்த மாவட்டங்களுக்கு மக்கள் செல்லும் வகையில் அந்தந்த மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார். மேலும்
இரவு 9 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறிய அமைச்சர்

பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கூறினார்.

அறிகுறி இருந்தால் மட்டுமே ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும்,
அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என்றும் உறுதியளித்த அமைச்சர்,
அரசு பேருந்துகளில் பழைய மாதாந்திர பாஸ் செப்டம்பர் 15ந்தேதி வரை செல்லும் என்றும் அறிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button