கோக்கு மாக்கு

சிறப்பு ரயில் முன்பதிவு தொடக்கம் தமிகத்தில் வரும் ஏழாம் தேதி முதல் இயக்கப்பட உள்ள 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு வரும் 7-ந்தேதி முதல் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 7-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து, கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி மற்றும் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கும் 9 சிறப்பு ரெயில்களை அறிவித்தது. நேற்று, தெற்கு ரெயில்வே மேலும் கூடுதலாக 4 சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

புதிய சிறப்பு ரயில்கள்
-சென்னை எழும்பூர்- செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06181) வருகிற 10-ந்தேதி முதல் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக செங்கோட்டை- எழும்பூர் (06182) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 11-ந்தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4.45 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

-எழும்பூர்- கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (02633) வருகிற 8-ந்தேதி முதல் மாலை 5.15 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் நாள் காலை 6.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக கன்னியாகுமரி-எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (02634) வருகிற 9-ந்தேதி முதல் மாலை 5.05 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (02671) வருகிற 7-ந்தேதி முதல் இரவு 9.05 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக மேட்டுப்பாளையம்-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (02672) வருகிற 8-ந்தேதி முதல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு சென்னை வந்தடையும்.

-திருச்சி-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (02627) வருகிற 7-ந்தேதி முதல் காலை 6 மணிக்கு திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவில்-திருச்சி இடையே அன்று மதியம் 3 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும்.இவ்வாறு தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த 13 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 5 மாதங்களுக்கு பிறகு ரெயில் செல்லவிருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் தனிமனித இடைவெளியுடன் டிக்கெட்டு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button