கோக்கு மாக்கு

கோவையில் ஹோஃப் காலேஜ் அருகே கொரோனா தொற்று இல்லாத தன் குடும்பத்தை கொரோனா தொற்று உள்ளதாக கூறி அசிங்கபடுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் என கூறி வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு

கோவை பீளமேடு அருகே வசிக்கும் நான்கு பெண்களுக்கு கொரோனா என எடுக்கப்பட்ட பரிசோதனையில் முடிவுகள் வெளியாகின. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் கடந்த செப்டம்பர்2ஆம் தேதி வந்திருக்கின்றன.

அதில் அந்த நான்கு பெண்களுக்கும் கொரோனா என அரசு மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் ஈ எஸ் ஐ மருத்துவமனைக்கு சென்றபோது நால்வருக்கும் பெட் இல்லை என்று திருப்பி அனுப்பியதாக கூறப்படுகின்றன. இந்த நிலையில் அரசு மருத்துவமனையின் சிகிச்சை மற்றும் பரிசோதனை முடிவுகளை நம்பாத அந்த நான்கு பெண்களும் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அந்தன்படி அந்த பெண்களுக்கு கொரோனா இல்லை என்று கூறியுள்ளனர்.

கொரோனா இல்லை என்று தனியார் மருத்துவமனையில் முடிவுகள் வந்த நிலையில், தங்களுக்கு கொரோனா இருப்பதாக கூறி அசிங்கப்படுத்திய மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் என கூறி அந்த நான்கு பெண்கள் குடும்பத்தார் பேனர் ஒன்று அடித்து தங்கள் வீட்டின் முன் ஒட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் வீட்டின் முன்பு கொரோனா தடை செய்யப்பட்ட பகுதி எனவும் ஒட்டப்பட்டுள்ள மாநகராட்சியால் சர்ச்சையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

கோவை செய்தியாளர் பிரசன்னா

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button