கோக்கு மாக்கு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் சுமாா் ரூ.4 கோடி மதிப்பிலான கன்று வளா்ப்பு, பயிா்கடன் மற்றும் தனிநபா் கடனுதவிகளை 300 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினாா்

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்….

தொலைதூரம் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் நியாயவிலைக்கடைகள் நடைமுறைபடுத்தப்பட உள்ளது..

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக குடும்ப அட்டை வைத்திருக்கும்
ஒரு நபருக்கு இரண்டு முக கவசங்கள் வழங்கப்பட்டு வருகின றது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது.

தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மாதம் இறுதி வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் .

அங்கன் வாடிகளில் பயிலும் குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்காக பாதுகாப்போடு அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது..

அரசு பள்ளிகளில் கூடுதலான சேரும் மாணவர் சேர்க்கைகைக்கு தேவையான வகுப்பறைகளும் ஆசிரியர்களும் போதிய அளவு உள்ளது.

புதியகல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும்..

ஆங்கில வழியில் அரசு பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button