கோக்கு மாக்கு

வாணியம்பாடி அருகே 10 வயது சிறுமியை வைத்து கள்ளச்சாராய விற்பனை பகுதி மக்கள் அதிர்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்து கோவில் கரிகுட்டி காலனி பகுதியில் காவிரி மற்றும் வினோத் ஆகியோர் அவரது வீட்டில் 10 வயது சிறுமியை வைத்து கள்ளச்சாராய வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் பொரிகாரன் வட்டம், சஞ்சிவநூர் ஆகிய பகுதிகளிலும் கள்ளசாராய வியாபாரத்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் பொறுப்பேற்ற நாள் முதல் மாவட்டத்தில் விற்கப்படும் கள்ளச்சாராயம், கஞ்சா, ரேஷன் அரிசி கடத்தல் என சமுக வீரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அவப்போது சிலர் சமுக வீரோத  செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்கள் ஒரே நோக்கத்தில் பணியாற்றினால் சமுக விரோத செயல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் எனவும் பள்ளிப்பருவத்தில்  கல்வி கற்க சிறகடித்து  பறக்க கூடிய சிறுமியை    சாராயம் விற்பனையில்  ஈடுபடுத்தி சமூக  விரோத செயலுக்கு  ஆளாக்கும் பெற்றோர்  மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button