கோக்கு மாக்கு

தமிழக அணைகளில் உயரும் நீர்மட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

கர்நாடக மாநிலத்தில் கனமழை எதிரொலியால் தெண்பெண்ணையாற்றில் நீர்வரத்து 960 கன அடியாக அதிகரிப்பு
தமிழக அணைகளில் உயரும் நீர்மட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

கர்நாடகா மாநிலம் தெண்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கேஆர்பி அணை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நந்திமலை உள்ளிட்ட தெண்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தெண்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்தால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கேஆர்பி அணை, திருவண்ணாமலை சாத்தனூர் அணை உள்ளிட்ட தமிழக அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தெண்பெண்ணையாற்றில் நீர்வரத்து காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி தற்போது 960 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், தற்போது அணையின் நீர்மட்டம் 40.34 அடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு மற்றும் விவசாயம் குடிநீர் ஆகிய காரணங்களுக்காக தெண்பெண்ணையாற்றின் வழியாக கேஆர்பி அணைக்கு 960 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடகா மாநிலத்திலிருந்து தெண்பெண்ணையாற்றின் வழியாக தொழிற்சாலை இரசாயண கழிவுகள் தொடர்ந்து ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் தண்ணீர் நிறம் மாறி கடும் துர்நாற்றத்துடன் நுரைகள் பொங்கி செல்கிறது. அதிக அளவு நுரைகள் வெளியேறி வருவது விவசாயிகளிடத்தில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த இரசாயண கழிவுகள் ஆற்றில் நுரைகளுடன் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இரு தினங்களுக்கு முன்பு தேசிய பசுமை ஆணையம் தானாக முன் வந்து தென்பெண்ணை ஆற்றின் நீரை ஆய்வு செய்து, நுரையுடன் வரும் தண்ணீரை பரிசோதனைக்காக எருத்து சென்றுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button