கோக்கு மாக்கு

கர்நாடகா மாநிலத்திலிருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 11லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் பறிமுதல் : டிரைவர் கைது, ஓசூர் போலீஸார் நடவடிக்கை

கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு ஈச்சர் வண்டி மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகளை ஓசூர் எல்லைப்பகுதியில் சிப்காட் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா மூட்டைகளை கடத்தி வந்த ஈச்சர் வாகன டிரைவரை கைது செய்து, ஈச்சர் வாகனத்தை பரி முதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒசூரில் அமைந்துள்ள மாநில எல்லைப்பகுதியான சூசூவாடி பகுதியில் சிப்காட் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஈச்சர் வாகனத்தை போலீஸார் மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் லாரியில் தடை செய்யப்பட்ட ஏராளமான குட்கா மூட்டைகள் இருந்தது. இதனையடுத்து லாரியை ஒட்டி வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு குட்கா மூட்டைகளை கடத்தி சென்றது தெரியவந்தது,

கடத்தி செல்லப்படும் இந்த குட்கா மூட்டைகள் சென்னையில் எந்த பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் உரிமையாளர்கள் யார் என்பது குறித்து போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button