கோக்கு மாக்கு

குடி போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்

சங்கரன்கோவிலில் குடி போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு

இளைஞரை காவல் துறையினர் மீட்டு சென்று விசாரணை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவுடையபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் திருமலை குமார் வெல்டிங் வேலை பார்த்து வருபவர் இவர் குடிக்கு அடிமையாகி அவ்வப்போது அப்பகுதியில் போதையில் ரகளை செய்து வந்துள்ளார். போதைக்கு அடிமையாகி வீட்டில் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வருவதும் உண்டு இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் யாரும் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அதே தெருவில் இராண்டவது மாடியில் முருகன் என்பவர் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார் மேலும் இங்கு பெண்களுக்கு தையல் பயிற்சி நிலையமும் செயல்பட்டு வருகிறது ஆள் நடமாட்டம் யாரும் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்தும் இரண்டாவது மாடியில் உள்ள அழகு நிலைய கண்ணாடி கதவையும் உடைத்து உள்ளே உள்ள பேன், தையல் மிஷின் உள்ளிட்ட பொருட்களை திருட முயற்சி செய்து உள்ளார் .கண்ணாடி உடைக்க படும் சத்தம் கேட்டு அருகில் குடியிருப்போர் வந்து பார்க்கும் போது போதையில் திருடிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. போதையில் இருந்த அந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து சங்கரன்கோவில் நகர காவல் துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர் காவல் துறையினர் சற்று வர கால தாமதம் ஆனதால் மின் கம்பத்தில் கட்டி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button