கோக்கு மாக்கு

பணிக்கு திரும்பிய ஆய்வாளர் சோமசுந்திரத்திற்கு கோபி டி.எஸ்.பி. தங்கவேல் பூங்கொத்து கொடுத்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கோபி காவல் நிலைய ஆய்வாளர் இன்று பணிக்கு திரும்பினார்.

பணிக்கு திரும்பிய ஆய்வாளர் சோமசுந்திரத்திற்கு கோபி டி.எஸ்.பி. தங்கவேல் பூங்கொத்து கொடுத்தும்
ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா
தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த பல்வேறு அரசு உயர் அதிகாரிகளுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு
தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமாகி வருகின்றனர்.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையம்
காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சோமசுந்தரம் கடந்த 20 நாட்களுக்கு முன் தானாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டதின் முடிவில் அவருக்கு சிறிய அளவில் நோய் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.

அதனைத்தொடர்ந்து கடந்த 15 நாட்களாக தனிமை படுத்திக்கொண்ட பின் தற்போது முழுமையாக குணமடைந்தார் .

தற்போது மீண்டும் பணியில் இணைய காவல் நிலையத்திற்கு வந்த ஆய்வாளருக்கு காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் பூங்கொத்து கொடுத்தும்

மகளிர் காவல் நிலைய காவலர்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button