தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றிய மகள்.! மாவட்ட ஆட்சியர் பாராட்டு
தனது தந்தை எழுதிய உயிலின்படி, இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவும் வகையில்ரூ.50 ஆயிரம் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் நேற்று வழங்கினார்.
கடலூர் திருப்பாதிரிபுலியூர்,தேரடித் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகசுந்தரம்.வட்டாட்சியராகப் பணிபுரிந்த இவர், கடந்த 1996-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 2019-ஆம் ஆண்டு நவ.17-ஆம் தேதி காலமானார்.
இவர் தனது இளைய மகள் கயல்விழிக்கு எழுதிய உயில் சாசனத்தில், “தமது நன்செய் நிலம் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து ஆண்டுதோறும் ரூ.50 ஆயிரத்தை தனது மனைவி ஏ.ரமணி அம்மாளின் நினைவாக,கடலூர் வட்டத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவிடும் வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கயல்விழி நேற்று திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி அவர்களைச் சந்தித்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.இவருக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஸ்ரீஅபிநவ் உள்ளிட்டோர் பாராட்டுத் தெரிவித்தனர்.
Read Next
3 weeks ago
டேபிளில் தூங்கும் முதலமைச்சரின் அறிவிப்பு – உதவி ஆய்வாளர்களின் பதவி உயர்வு என்ன ஆச்சு..?
June 8, 2024
பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….
June 7, 2024
பழனி கிரிவில பாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு
June 7, 2024
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .
June 7, 2024
தமிழகத்தில் தபால் ஓட்டில் பா.ஜ.க.வுக்கு 2ம் இடம்: அரசு ஊழியர் அதிருப்தி காரணமா?
June 7, 2024
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய பிரிவு பயன்பாட்டிற்கு வந்தது
June 7, 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
Back to top button