கோக்கு மாக்கு

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் CITU காமராஜர் ஆட்டோ சங்கம் சார்பாக ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட கடையம்பெரும்பத்து CITU காமராஜர் ஆட்டோ சங்கத்தில் வெகு சிறப்பாக சரஸ்வதி பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் சுமார் இருபது வண்டிகள் பங்கு பெற்றது. பூஜையானது சுமார் மாலை ஐந்து மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு CITU ஆட்டோசங்க கொடியினை CITU மின்ஊழியர் சங்கத்தை சார்ந்த ஜெயராஜ் என்பவர் ஏற்றி தொடங்கி வைத்தார்.கடையம்பெரும்பத்து ஆட்டோசங்கத்தின் தலைவர் அற்புதஜெகன்பிரகாஷ் தலைமையில் பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒற்றுமையோடு மிகச்சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இரவு 6மணியளவில் அனைத்து வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலமாக மேட்டூர், வெள்ளைப்பனையேறிப்பட்டி, அரியப்பபுரம், கீழஅரியப்பபுரம், ரகுமானியாபுரம், வெய்க்காலிப்பட்டி அருந்ததியர் காலனி வரை சென்று இரவு 7மணியளவில் ஸ்டாண்டில் வந்து இனிதே நிறைவுபெற்றது.ஆட்டோ ஸ்டாண்ட் செயலாளர் செந்தில்குமார், ஆட்டோ ஸ்டாண்ட் பொருளாளர் மா.அருவேல்ராஜ், மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் உறுப்பினர்கள் மேட்டூர் ஜோசப்,ஆசிர்வாதம், வெள்ளைப்பனையேறிப்பட்டி வை. முருகன், கார் முருகன், வெய்க்காலிப்பட்டி செல்வக்குமார், வின்முருகன், விக்னேஷ், ராஜா, மாசானம், கைலாசம் தெற்குமாலைசூடிப்பட்டி வன்னிராஜா, ஐயங்கண்ணு, சரவணப்பெருமாள், ஆகியோர்கள் கலந்து கொண்டனர். விசில் செய்தியாளர் திருமுருகன்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button