க்ரைம்செய்திகள்

கடையத்தில் பூட்டிய வீட்டில் வாலிபர் உடல் அழுகிய நிலையில் மீட்பு

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியை சேர்ந்தவர் மவுனசாமி மகன் மகேஷ்ராஜா (43). இவருக்கும் கடையம், பாரதி நகரைச் சேர்ந்த விஜி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதி இருவரும் கடையம் ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள ஒரு வீட்டில் வாடைகைக்கு வசிந்து வந்தனர். இந்த நிலையில் விஜி திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.  மகேஷ்ராஜா ஆந்திராவில் வேலை பார்த்து கடந்த வாரம் வீட்டிற்கு திரும்பினார்.

இந்த நிலையில் மகேஷ்குமார் வீடு பூட்டிய நிலையில் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் நேற்று மாலை  கடையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து கடையம் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயராஜ், சரசையன், எஸ்பி எஸ்ஐ சேகர், எஸ்பி தனிபிரிவு ஏட்டு ஆனந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மகேஷ்ராஜா உடல் வீங்கி அழுகிய நிலையில் உயிரழந்து கிடந்தார். மகேஷ் ராஜா நீரழிவு  நோயால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. உடலைக் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூட்டிய வீட்டில் வாலிபர் மர்மமாக இறந்து கிடந்தது குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button