கோக்கு மாக்கு

வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து மோசடி செய்த பெண் கைது

நாகையில் வருமானவரித்துறை அதிகாரி போல நடித்து ஓய்வு பெற்ற நடத்துநரிடம் 45 லட்சம் ரூபாய்  சுருட்டிய கும்பலின் தலைவி தனிப்படை போலிசாரால்  நள்ளிரவில் கைது.

நாகை அடுத்துள்ள பால்பண்ணைச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற நடத்துநர் சுப்ரமணியன். இவரிடம்  நாகை ஆண்டோ சிட்டி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனை பயன்படுத்தி ராஜேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் போலி வருமானவரித்துறை அதிகாரிகள் தோற்றத்தில் நடத்துநர் சுப்ரணியணிடம் சுமார் 45 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி அபகரித்து தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சுப்ரமணியன் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் தான் ஏமாற்றபட்டது புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேஸ்வரி உள்ளிட்ட 9 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் ராஜேஸ்வரி தஞ்சையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்ற தனிப்படை போலிசார் அவரை நள்ளிரவில் கைது செய்தனர். பின்னர் நாகை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த தனிப்படை போலிசார் நடத்துநர் சுப்ரமணியனிடம் 45 லட்சம் ரூபாய் பணம் மற்றும் காரைக்காலில் பல்வேறு நபர்களை ஏமாற்றிய புகார்கள் குறித்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். நாகையில் வருமானம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து பல லட்சத்தை சுருட்டி தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button