க்ரைம்

அவதூறு வழக்கில் கிசோர் கே சுவாமி கைது சென்றார் சிறைக்கு

*முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமியை சங்கர் நகர் போலீசார் அதிரடியாக இன்று காலை கைது செய்தனர்*

சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் கிஷோர் கே சாமி(41)

பாஜக ஆதரவாளரான இவர் மீது பெண் பத்திரிகையாளர்களை இழிவு படுத்தியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா, கலைஞர் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோரை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் சங்கர் நகர் காவல் நிலையத்தில் கடந்த 10ம் தேதி புகார் செய்தார்.

அதன்பேரில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153- கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல்,

505(1)( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல்,

505( 1) (c) – ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று அதிகாலை கிஷோர் கே சாமியை கைது செய்தனர்.

தாம்பரம் நீதித்துறை நடுவர் அனுப்பிரியா முன் ஆஜர்படுத்தினர்.

நீதித்துறை நடுவர் அனுப்பிரியா வரும் 28ஆம் தேதி வரை கிஷோர்கே சாமியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து அவரை சிறையில் அடைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button