செய்திகள்

தமிழக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் !!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை மீட்க கோரியும், திமுக அரசின் போக்கை கண்டித்தும் திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும் கேரள முதலமைச்சரை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை கேரள அரசு அத்துமீறி எடுத்ததையும், அதை கண்டுகொள்ளாத தமிழக அரசையும் கண்டித்தும் தென் மாவட்டங்களில் இன்று (09.11.21) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதனையடுத்து திண்டுக்கல் கல்லரை தோட்டம் அருகே அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி தெரண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சீனிவாசன்….

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோதும் எப்படி மழை தொடர்ந்து பெய்தது அதுபோல தொடர்ந்து தற்போது மழை பெய்து குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது அதெல்லாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மேலே இருந்து நமக்கு ஆசி வழங்குவது மூலம் தான். திமுக ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகிறது அவர்களில் சாதாரண தொண்டன் முதல் மேலே உள்ள தலைவர்கள் வரை யாராவது திருந்தி இருக்கிறார்களா என்றால் இதுவரை இல்லை. ஆளும் கட்சியின் பயமுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களுக்கு மீறி எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுகவிற்கு போராட்டம் நடத்துவதற்கு காவல் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் மக்களுக்காக நாம் ஆற்றும் சேவை மற்றும் கருத்துக்களை எப்படி சொல்ல வேண்டுமோ அதற்கு இறைவன் நமக்கு வழி வகுத்துக் கொடுத்து இருக்கிறான். திமுக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சர்கள் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி அதிமுகவை பழி வாங்கலாம் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தொடர் மழை பெய்து வருகிறது முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் இடுப்பளவு தண்ணீர் உள்ளது என தொலைக்காட்சியில் பொதுமக்கள் அளிக்கும் பேட்டியை பார்த்தேன். முதலமைச்சர் தனது தொகுதியை கூட சரி செய்யாமல் வைத்திருக்கிறார். இவர் எப்படி தமிழ்நாட்டை சரி செய்வார் என பொதுமக்கள் கூறுகின்றனர். ஆறு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது திமுக ஆட்சிக்கு வந்து இதற்கு முன்பு மழை வந்த போதும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பல்வேறு திட்டங்களை செய்து தூர்வாரி வாய்க்காள்களை சரி செய்து தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டனர்.

ஆனால் தற்போது துரைமுருகன் தற்போது பணிகளை செய்ய வில்லை. இதனால் சென்னை நாறிப் போய் கிடக்கிறது. சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 29ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் கேரள அமைச்சர்கள் தண்ணீரை திறந்து விட்டனர்.எங்களுக்கு தெரியாமையே திறந்து விட்டனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது போன்றுதான் பத்திரிக்கைகள் எழுதியுள்ளனர். இரண்டு நாள் கழித்து தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு துரைமுருகன் சவால் விடுகிறார். தமிழ்நாடு அரசு தான் தண்ணீர் திறக்க வேண்டும். எதன் அடிப்படையில் கேரள அரசு திறந்தது அவர்களுக்கு எந்த உரிமை இருக்கிறது. திமுகவிற்கு தோழமைக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தயவு தேவை என்பதற்காக கேரளா அமைச்சர்கள் தண்ணீர் திறந்து விட்டது தவறு என ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிக்கை விட்டனர். ஆனால் துரைமுருகன் ஸ்டாலினோ தவறு நடந்து விட்டது இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்க்கலாம் என்று பேசி இருக்கலாம் அதை விட்டுவிட்டு அதிமுக ஆட்சியில் அ முதலமைச்சர் துணை முதலமைச்சர் பொதுப்பணித்துறை அமைச்சர் வந்து பார்வையிடவில்லை என்று துறைமுருகன் கூறியுள்ளார்.

2006 முதல் 2011 வரை 14 முறை இந்த அணையை பார்வையிட்டு ஆய்வு செய்ததற்கு அதிகாரிகள் சாட்சியாக இருக்கிறார்கள் என்று ஓபிஎஸ் தெரிவித்தார். ஆனால் மறுநாள் நீங்கள் ஆய்வு செய்த தேதி வைத்திருக்கிறீர்களா என துரைமுருகன் கேட்கிறார். ஆய்வு செய்த தேதி எல்லாம் குறித்து வைத்திருக்க முடியுமா. தங்க தமிழ்செல்வன் உடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்ட புகைப்படத்தை சாட்சியாக ஒ.பி.எஸ் வெளியிட்டுள்ளார். தற்போது தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் தான் உள்ளார் அவரிடமே கேட்டுக் கொள்ளலாம் என ஓபிஎஸ் ஒரு ஆண் சிங்கம் போல பதில் கொடுத்துள்ளார். முல்லை பெரியாறு அணையை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் நமக்கு தீர்ப்பு அளித்துள்ளது. தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது வருடங்கள் தமிழக அரசுக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் தான் கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விட அனுமதி உள்ளது என தெரிவித்தார். மேலும் ஊராட்சி ஒன்றியம் பஞ்சாயத்து உள்ளிட்டவைகளில் நடக்கும் தில்லுமுல்லுகள் குறித்து எங்களுக்கு தகவல் தந்தால் அங்கு நேரடியாக வந்து போராட்டம் நடத்தி உரிமைகளை மீட்டுத் தருவோம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினர் மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்று பேசினார்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திமுக #தமிழகஅரசு #அதிமுக #முல்லைபெரியாறுஅணை #DMK #ADMK #Tamilnadu #TNGovt #MullaiPeriyarDam

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button