செய்திகள்

சரவண ஸ்டோர் நிறுவனத்தில் ரெய்டு : 2 நாளாக தொடரும் ரெய்டு!

சரவண ஸ்டோர் நிறுவனத்தில் ரெய்டு : 2 நாளாக தொடரும் ரெய்டு!

தமிகத்தில் சூப்பர் சரவணா ஸ்டோர், மற்றும் சரவணா செல்வரத்தினம் நிறுவனங்களுக்கு சொந்தமான கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான சரவணா ஸ்டோர், தற்போது சரவணா செல்வரத்தினம், சூப்பர் சரவணா ஸ்டோர் என்ற பெயரில் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிளைகள் உள்ளன. இரண்டு நிறுவனங்களும் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, அப்பணத்தை தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ததாக வருமானவரித் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடைகளில் நேற்று காலை 8.30 மணி முதல் வருமானவரித் துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர்.இதேபோல், சென்னை தியகாராய நகர், மதுரையில் உள்ள சரவணா செல்வா ரத்தினம் நிறுவனத்திற்கு சொந்தமான கடைகளிலும் வருமானவரி சோதனை நடைபெற்றது.

தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றதாக வருமானவரித்துறையினர் தெரிவித்தனர்.இந்நிலையில் சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர், மற்றும் சரவணா செல்வரத்தினம் அலுவலகம் மற்றும் கடைகளில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது.

மதுரை சரவணா செல்வரத்தினம் வணிக நிறுவனத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. 8 தளம் கொண்ட கட்டிடத்தில் தளத்திற்கு தலா 3 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.திருநெல்வேலியில் சோதனை செய்து வருகின்றனர். இருபதிற்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர் நிறுவனத்தில் உள்ள பொருட்கள் நகைகள் இருப்பு குறித்தும் கணக்கு எடுத்து வருவதாக தெரிகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button