செய்திகள்

கஞ்சா பிரியர்களுக்கு குட் நியூஸ்: ஐகோர்ட் சூசக கேள்வி!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கலாவதி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கல்லூத்து கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது” என உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு அரசு தரப்பில், சட்டவிரோதமான மது விற்பனை மற்றும் போலி மதுபான விற்பனை நடைபெறுவதால் அங்கு டாஸ்மாக் கடையை திறக்க முடிவு செய்யப்பட்டது என பதில் அளித்திருந்தார்.

அதற்கு நீதிபதிகள், “அப்படி என்றால் கஞ்சா சட்டரீதியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா?” என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து நீதிபதிகள், “தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடினால் பாண்டிச்சேரி செல்லத் தொடங்குவார்கள். இந்தியா முழுவதும் மது தடை செய்யப்பட்டால் பிறகு வெளிநாடுகளுக்குச் செல்வார்கள்” என விளக்கமளித்த நீதிபதிகள் கல்லூத்து கிராம மக்களின் மனுவை பரிசீலித்து அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடை அமைப்பது குறித்து முடிவு செய்யவும் என அறிவுரை வழங்கினர். இதற்கான அறிக்கையை டிசம்பர் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button