செய்திகள்
Trending

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே…..

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே…..

வங்காளத்தில் உள்ள ஒரு இரயில்வே நடைபாதையில் பெண் ஒருவர் தனது திருமணத்திற்கான நகைகள் மற்றும் பட்டுப்புடவை அணிந்து, ஏழை எளியவர்களுக்கு எஞ்சிய திருமண உணவை வழங்கும் காட்சி விடியோவாக வெளியாகி பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாப்பியா கர் என்று பெயர் கொண்ட அந்த பெண் வீடற்றவர்களுக்கு உணவளிப்பது அல்லது வீடற்றவர்களுக்கு உணவளிக்கும் ஒரு குறிக்கோளைப் பற்றிய ஆழமான கொள்கை கொண்டவரா என்பது குறித்து எந்த தகவலும் சரியாக தெரியவில்லை.

ஆனால் அந்தப் பெண்ணின் முயற்சி அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. திருமண புகைப்பட கலைஞரான நிலஞ்சன் மொண்டல், முகநூலில் திருமண புகைப்படக் கலைஞர்கள் பக்கத்தில் அந்தத் தருணத்தைப் பகிர்ந்துள்ளார். மொண்டல் அந்தப் பெண்ணை பாப்பியா கர் என்று அடையாளம் காட்டுகிறார், பாப்பியா தனது சகோதரனின் திருமணத்தில் மீதமுள்ள உணவை ஏழைகளுக்கு கொடுக்கிறார்.

கொல்கத்தா புறநகர் ரயில் நிலையமான ரனாகாட் சந்திப்பில் டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 1 மணியளவில் இந்த நிகழ்வு நடந்தேறியது. பாரம்பரிய திருமண உடையை அணிந்து, காகிதத் தட்டுகளில் உணவு பரிமாறும் பெண்ணை புகைப்படத்தில் காண முடிகிறது. அவர் உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த மேடையில் எல்லா வயதினரும் திரண்டிருந்தனர். பரிமாறப்பட்ட உணவுகளில் பருப்பு, ரொட்டி, சப்ஜி, சாதம் என அனைத்துவிதமான உணவுகளும் இருந்தது.

நிலஞ்சன் மொண்டலின் பேஸ்புக் பதிவை 1,200 க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர் மற்றும் பலர் அதற்கு கருத்துக்களையும் தெரிவித்தனர். அதில் சிலர் பாப்பியா கர் கடந்த காலங்களில் கூட, உணவை சமைத்து ஏழை மற்றும் ஏழைகளுக்கு பரிமாறியுள்ளார் என்றும் கூறினர். பெங்காலியில் கருத்து தெரிவித்தவர்களில் ஒருவர், அந்தப் பெண்ணின் கருணைச் செயலைப் பாராட்டினார், மேலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான மனநிலை இருந்தால், சமூகம் சிறந்த இடமாக இருக்கும் என்று கூறினார். மனிதாபிமானமிக்க சிறந்த செயலை செய்துள்ளார் என்பதற்காக பல விதமான கருத்துக்கள் கமென்ட் பகுதியில் நிறைந்து இருந்தன.

உணவை வீணாக்காமல், தேவைப்படுவோருக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்கிற அந்தப் பெண்ணின் நல்லெண்ணத்தையும், அவரின் செயலையும் பலரும் பாராட்டியுள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் பிறரின் தேவை அறிந்து உதவுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இத்தகைய சூழ்நிலையிலும் கூட உணவை வீணாக்காமல் தேவைப்படுவோருக்கு அளிக்கவேண்டும் என்ற அந்த உயர்ந்த எண்ணத்தை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button