திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச் சந்தையில் நத்தம் மேலூர் சிங்கம்புணரி கோபால்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து வியாபாரிகள் காய்கறி கடைகள் நடத்துவதற்கு இங்கு வருகின்றனர் இந்நிலையில் இன்று காலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா எட்டி மங்கலத்தைச் சேர்ந்த நாச்சான் மனைவி பேச்சி (வயது 60) என்பவர் வழக்கம் போல் காய்கறி கடை நடத்துவதற்காக சாலை ஓரத்தில் காய்கறி மூடைகளை அடுக்கி கடை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். காய்கறி கடை நடத்துவதற்காக சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தில் தாழ்வாக செல்லும் பழைய மின் வழி தடத்தை மாற்றி உயரமான அளவில் மின்கம்பம் ஊன்றப்பட்டது. அதில் மின் இணைப்பு கொடுக்காமல் மின் கம்பியை சுருட்டி கம்பத்தின் கீழ் தரையில் வைத்திருந்தனர். மின் இணைப்பு கொடுக்காத மின் கம்பியில் அருகில் இருந்த ஏற்கனவே மின்சாரம் சென்று கொண்டிருக்கும் மின் வழித்தடத்தில் உரசியதால் மின்சாரம் தாக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் காவல்துறையினர் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Read Next
க்ரைம்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
விமர்சனங்கள்
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
4 days ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
4 days ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
4 days ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
4 days ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
4 days ago
முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி
4 days ago
களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை
February 3, 2026
மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
February 2, 2026
வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
Related Articles
மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டி
December 7, 2024
மணல் கொள்ளை – கண்டு கொள்ளாத துறை அதிகாரிகள்
May 2, 2024
ஆட்சியரிடம் மனு அளிப்பு
December 9, 2024
Check Also
Close
-
எம்எல்ஏ தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம்.November 24, 2024