திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் சோலைஹால் திரையரங்கு சாலையில் உள்ளது. இங்கு 15 மீன் விற்பனை கடைகள் உள்ளன. இன்று 06.08.23 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் மீன், ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதன் காரணமாக திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் கெட்டுப்போன மீன்களை ரசாயனம் தடவி பதப்படுத்தி விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததன் பேரில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது மீன் மார்க்கெட் கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நல்ல மீன்களையும் அதிகாரிகள் கெட்டுப்போன மீன் எனக் கூறுவதாக தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீன்களை பறிமுதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் சோதனை நடத்துவதை நிறுத்திவிட்டு வெறும் கையுடன் மீன் மார்க்கெட்டில் இருந்து திரும்பி சென்றனர் இதனால் அங்கு ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
Read Next
1 day ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கில் விடுவிக்க கோரி பிரபல ரவுடி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி
April 9, 2025
உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்
December 5, 2024
மழைநீர் அகற்றம் பணி
December 6, 2024
Check Also
Close
-
கோவை ரயில் பெட்டிகளுக்கு மருந்து அடிக்கும் பணி தீவிரம்September 5, 2020