கோக்கு மாக்கு

கொல்லபட்ட புலி எழும் சந்தேகங்கள்!

சந்தேகங்கள் :

  1. 16.8.2023 அன்று சீகூர் வனப்பகுதியில் இறந்த 2 குட்டி புலிகளின் தாய் புலி குறித்த தகவல் இல்லை
  2. நீலகிரி நடுவட்டம் வனச்சரகம் முடிமந்து பகுதியில், தனியார் எஸ்டேட்டுக்குள் மர்மமான முறையில் 7 வயதான புலி மரணித்தது குறித்த முழு விபரம் இதுவரை வெளியிடபடவில்லை
  3. இந்தச் சம்பவங்களுக்கு எல்லாம் முன்னதாக, பிப்ரவரி மாதம் நீலகிரியில் புலியை வேட்டையாடி அதன் பாகங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முயன்ற, நான்கு பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்திருந்த நிலையில் 6 புலிகள் இறப்பு குறித்த விசாரணை சரியான வழியில் செல்கிறதா என சந்தேகம் உள்ளது
  4. 10.9.2023 காலை வனத்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் இறந்த 2 புலிகளும் பெண் புலிகள் என குறிப்பிட்டுள்ளனர் . ஆனால் PM ரிப்போர்ட் -ல் ஆண்புலிகள் என கூறியுள்ளனர் . அப்படியானால் ஆண் பெண் புலி வித்தியாசம் கண்டுபிடிக்க கூட தெரியாத நிலையில் வனத்துறையினர் உள்ளனர். அல்லது மேலும் 2 புலிகள் இறப்பை மறைத்துவிட்டனர் என எடுத்து கொள்ளலாமா ?

5 . புலிகள் காப்பக பகுதியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் சுற்றலவில் எந்த வித அனுமதியில்லாத நடவடிக்கையும் இருக்க கூடாது .அப்படி இருக்கையில் இந்த மாடும் மாட்டு உரிமையாளரும் புலிகள் காப்பக பகுதிக்குள் எப்படி சென்றனர்.

  1. 2 புலிகள் இறந்துகிடந்த நீர் பகுதிக்கு அருகிலேயே மாடு இறந்த நிலையில் கிடந்ததை 10.9.2023 காலை வெளியிட்ட செய்திகுறிப்பில் ஏன் கூறவில்லை
  2. ஒவ்வொரு முறையும் புலிகள் இறந்து சில நாட்கள் கடந்த பிறகே கண்டுபிடிக்கபட்டுள்ளது . அப்படியானால் ஒவ்வொரு வனச்சரகத்திலும் வேட்டை தடுப்பு காவலர் , வன கண்காணிப்பாளர் , வனகாப்பாளர் , வனவர் , வனசரகர் உட்பட்ட பெரும் படையே உள்ளது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button