திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துபட்டியைச் சேர்ந்த ராஜாமணி 53. இவர் தற்போது நிலக்கோட்டையில் காமராஜர் நகரில் குடியிருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் கோட்டை ராணி இவர்கள் இருவருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ராஜேஸ்வரி, லோகேஸ்வரி என்ற பவித்ரா 2 மகள்களும், கோட்டைச்சாமி என்ற மகனும் உள்ளார்கள். இதில் ராஜேஸ்வரி திருமணம் செய்து தனது கணவரோடு தனியாக வசித்து வருகிறார். லோகேஸ்வரி என்ற பவித்ரா வயது 27. இவர் குளத்துபட்டியைச் சேர்ந்த அரிசி கருப்பன் வயது 30 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு என்ன கருத்து வேறுபாடு காரணமாக நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருவருக்கும் சமாதானம் பேசியும் ஒத்து வராததால் இருவரும் பிரிந்து விட்டனர். அதனைத் தொடர்ந்து ராஜாமணி தனது மகள் லோகேஸ்வரி என்ற பவித்ரா, மனைவி கோட்டை ராணி, மகன் கோட்டை ராஜ் ஆகிய 4 பேர்களும் நிலக்கோட்டையில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டை ராணிக்கும் மகள் லோகேஸ்வரி என்ற பவித்ராக்கும் ஏற்கனவே திருமணம் செய்த அரசி கருப்பனோடு சேர்ந்து வாழ போவதாக பவித்ரா கூறியதைத் தொடர்ந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் ஒருவருக்கொருவர் கையில் அடித்துக் கொள்ளும்போது மகள் லோகேஸ்வரி என்ற பவித்ரா கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயக்கம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து உடனடியாக தனது கணவர் ராஜாமணிக்கு கோட்டை ராணி போன் மூலம் லோகேஸ்வரி என்ற பவித்ரா கீழே விழுந்து மயங்கி கிடக்கிறார். ஆட்டோ பிடித்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் ஆட்டைப் பிடித்து வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. ராஜாமணி சம்பவ இடத்திற்கு வந்து தனது மகள் லோகேஸ்வரி என்ற பவித்ராவில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் கொடுத்தனர். இது குறித்து ராஜாமணி கொடுத்த புகாரின் படி கோட்டை ராணியை நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கைது செய்து நிலக்கோட்டை மேஜிஸ்டன் நல்ல கண்ணன் முன்னிலையில் ஆஜர் படுத்தி நிலக்கோட்டை சிறைச்சாலையில் அடைத்தனர். தாய் மகளுக்கு இடையே நடந்த சிறு தகராறு மகள் இறந்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
Read Next
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
7 days ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
7 days ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
1 week ago
மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளர்
Related Articles
Check Also
Close