திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் சோலைஹால் திரையரங்கு சாலையில் உள்ளது. இங்கு 15 மீன் விற்பனை கடைகள் உள்ளன. இன்று 06.08.23 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் மீன், ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதன் காரணமாக திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் கெட்டுப்போன மீன்களை ரசாயனம் தடவி பதப்படுத்தி விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததன் பேரில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது மீன் மார்க்கெட் கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நல்ல மீன்களையும் அதிகாரிகள் கெட்டுப்போன மீன் எனக் கூறுவதாக தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீன்களை பறிமுதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் சோதனை நடத்துவதை நிறுத்திவிட்டு வெறும் கையுடன் மீன் மார்க்கெட்டில் இருந்து திரும்பி சென்றனர் இதனால் அங்கு ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
Read Next
7 days ago
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
7 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
7 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
1 week ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Related Articles
டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் செய்ததில் ஊழல் – அமைச்சர் தான் பொறுப்பு – அறப்போர் இயக்கம்
November 21, 2024
குளங்களை தூய்மைப்படுத்தும் பணி – அமைச்சர் பங்கேற்பு
November 25, 2024
உலகப் புகழ்பெற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா.
January 24, 2021
Check Also
Close
-
இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்;December 6, 2024