கோக்கு மாக்கு

நெல்லை தொழிலதிபர் வீட்டில் சோதனை மிளும் அரசியல் கட்சி!

நெல்லை
மாவட்டம்நெல்லை
நெல்லை தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை

நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர் எஸ் முருகன். மாநிலத்தின் பிரதான சாலை ஒப்பந்தக்காரர் மற்றும் தொழிலதிபர். பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியில் இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நெல்லை வருமானவரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையில் வந்த அலுவலர்கள் தொழிலதிபர் ஆர் எஸ் முருகன் வணிக நிறுவனத்தில் மாலை 5 மணி வரை ஆய்வு செய்தனர்.

ஒப்பந்த பணிகளைச் செய்யும் போது அதற்கான தொகையில் ஒரு சதவீதம் அட்வான்ஸ் டாக்ஸ் ஆக கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, முன்வரி செலுத்தாத தொகையை கணக்கிட்டு தொழிலதிபரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நெல்லை மாநகர் பகுதியில் அனைவரும் வியக்கும் வகையில் ஆர் எஸ் முருகன் மகனுக்கு பிரம்மாண்டமான திருமண விழா நடந்தது. அதற்காக இருவது கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • விவசாய நிலங்களுக்குள் பகலிலும் உலாவரும் காட்டு யானைகள்

    விவசாய நிலங்களுக்குள் பகலிலும் உலாவரும் காட்டு யானைகள்

    தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகளானது புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது என்பது தொடர் கதையாகி வரும் நிலையில், விவசாய நிலங்களை சுற்றி சோலார் மின் வேலிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும், சில நேரங்களில் அதையும் தாண்டி காட்டு யானை கூட்டங்களானது விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை அழிப்பது தொடர் கதையாகி உள்ளது இதன் தொடர்ச்சியாக, கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பகல் நேரத்திலேயே 2…


  • திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கு போலிசார் உதவி

    திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கு போலிசார் உதவி

    திண்டுக்கல்லில் வேடப்பட்டி பகுதியில் வாழ்ந்த மூர்த்தி, நீரிழிவு நோயால் தனது ஒரு கால் இழந்த நிலையில் தினமும் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வந்தார்.அதேபோல், பாரதிபுரத்தில் வசிக்கும் சரவணனும் கால் பிரச்சனை காரணாமாக அவசர உதவி தேவைப்பட்டவர். இவர்கள் நிலையை அறிந்த திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கார்த்திக், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் காவலர்கல் தனியார் அறக்கட்டளை உதவியுடன் இருவருக்கும் ஊனமுற்ற தள்ளுவண்டி மற்றும் வாக்கர் அன்பளிப்பாக வழங்கினர். இருவரும்…


  • குற்றாலநாதர் கோயிலில் மழைநீர் கசிவு

    குற்றாலநாதர் கோயிலில் மழைநீர் கசிவு

    தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறாப்பு மிக்க குற்றாலநாதர் கோயிலில் தொடர்ந்து பெய்து வரும் மிதமான மழையின் காரணமாக கோயில் வளாகத்தில் உட்புறச் சுவர்களில் இருந்து மழை நீர் கசிவு ஏற்பட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. கோயிலின் சுற்றுப்புற சுவர்களில் விரிசல் காணப்படுவதால் தண்ணீர் உள்ளே விழுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பல ஆண்டுகளாக கோவில் சுற்றுப்புறங்களில் எந்த ஒரு திருப்பனியையும் கோவில் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்றும், இரண்டு கல் மண்டபங்கள் சிதலமடைந்து கவலைக்கிடமாக காணப்பட்டு…


Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button