நெல்லை
மாவட்டம்நெல்லை
நெல்லை தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை
நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர் எஸ் முருகன். மாநிலத்தின் பிரதான சாலை ஒப்பந்தக்காரர் மற்றும் தொழிலதிபர். பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியில் இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.
இன்று காலை 10 மணிக்கு நெல்லை வருமானவரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையில் வந்த அலுவலர்கள் தொழிலதிபர் ஆர் எஸ் முருகன் வணிக நிறுவனத்தில் மாலை 5 மணி வரை ஆய்வு செய்தனர்.

ஒப்பந்த பணிகளைச் செய்யும் போது அதற்கான தொகையில் ஒரு சதவீதம் அட்வான்ஸ் டாக்ஸ் ஆக கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, முன்வரி செலுத்தாத தொகையை கணக்கிட்டு தொழிலதிபரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நெல்லை மாநகர் பகுதியில் அனைவரும் வியக்கும் வகையில் ஆர் எஸ் முருகன் மகனுக்கு பிரம்மாண்டமான திருமண விழா நடந்தது. அதற்காக இருவது கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழந்தது
ஊட்டி: மீட்கப்பட்ட இரண்டு புலிக்குட்டிகளில் ஒன்று உயிரிழந்துள்ளது. உயிருடன் உள்ள மற்றொரு குட்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. புலிகளுக்கான வாழிடம் பற்றாக்குறை, நீலகிரி உயிர்க்கோளக் பகுதியில் மிகக் கடுமையான பாதுகாப்புச் சவாலாக உருவெடுத்து வருகிறது. வாழிட இழப்பு மற்றும் துண்டாக்கம் அதிகரித்துவருவதால் மனிதர்–விலங்கு மோதல்கள் தீவிரமடைந்து, மனிதர்களுக்கும் பெரிய இரைமிருகங்களுக்கும் ஆபத்துகள் அதிகரித்துள்ளன. நிலப் பயன்பாட்டில் மாற்றங்கள், காடு சேதம் போன்ற மனிதச் செயல்பாடுகள்…
-
தொட்டியில் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அய்யாபட்டியில் உள்ள தங்கராஜ் என்பவரது தோட்டத்தில் சுமார் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் ஆண் புள்ளி மான் தவறி விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மானைப் பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த மான் அழகர்கோவில் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
-
தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி சண்முகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் யுவராணி. அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தபோது நாய் குரைக்கும் சத்தம் கேட்டு ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அப்போது, திமுக தலைமை கழக பேச்சாளர் முருகவேல் அந்த பகுதி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் வெள்ளி நாணயம் போன்றவை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது யுவராணி, இத்தனை வருட அரசியலில் எதுவும் செய்யவில்லை இப்போது இரண்டு நாட்களாக தூக்கத்தை கெடுக்கும் வகையில் இவ்வாறு செய்து வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால்…
