கோக்கு மாக்கு

நெல்லை தொழிலதிபர் வீட்டில் சோதனை மிளும் அரசியல் கட்சி!

நெல்லை
மாவட்டம்நெல்லை
நெல்லை தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை

நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர் எஸ் முருகன். மாநிலத்தின் பிரதான சாலை ஒப்பந்தக்காரர் மற்றும் தொழிலதிபர். பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியில் இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நெல்லை வருமானவரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையில் வந்த அலுவலர்கள் தொழிலதிபர் ஆர் எஸ் முருகன் வணிக நிறுவனத்தில் மாலை 5 மணி வரை ஆய்வு செய்தனர்.

ஒப்பந்த பணிகளைச் செய்யும் போது அதற்கான தொகையில் ஒரு சதவீதம் அட்வான்ஸ் டாக்ஸ் ஆக கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, முன்வரி செலுத்தாத தொகையை கணக்கிட்டு தொழிலதிபரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நெல்லை மாநகர் பகுதியில் அனைவரும் வியக்கும் வகையில் ஆர் எஸ் முருகன் மகனுக்கு பிரம்மாண்டமான திருமண விழா நடந்தது. அதற்காக இருவது கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • கஞ்சாவுடன் மாட்டிய பெண் – சிறைக்கு அனுப்பிய காவல் துறை

    திண்டுக்கல் அருகே விற்பனைக்கு வைத்திருந்த 3.650 கிலோ கிராம் கஞ்சாவுடன் பெண் கைது! திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. பிரதீப் இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடி, ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ரொட்டியார்சத்திரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மு.ஆறுமுக நயினார் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெயிலடிச்சாம்பட்டி பிரிவில் சார்பு…


  • மிக கொடூரமான முறையில் கடத்தப்படும் மாடுகள் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

    திண்டுக்கல் மாவட்டம் மற்றும் சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவிற்கு மாடுகள் கொண்டு செல்லப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் ஆந்திரா உட்பட வெளி மாநிலங்களில் இருந்து கண்டைனர் லாரிகளில் அளவுக்கு அதிகமான மாடுகளை உணவு தண்ணீர் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஏற்றி கொண்டு செல்கின்றனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறை சோதனை சாவடிகள் இருக்கின்ற போதிலும் இதுபோன்ற வாகனங்கள் எந்த ஆய்வுக்கும் உட்படாமல் சென்று வருகின்றன. மேலும் இதுபோன்ற கால்நடைகளுக்கு…


  • விவசாய நிலங்களுக்குள் பகலிலும் உலாவரும் காட்டு யானைகள்

    விவசாய நிலங்களுக்குள் பகலிலும் உலாவரும் காட்டு யானைகள்

    தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகளானது புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது என்பது தொடர் கதையாகி வரும் நிலையில், விவசாய நிலங்களை சுற்றி சோலார் மின் வேலிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும், சில நேரங்களில் அதையும் தாண்டி காட்டு யானை கூட்டங்களானது விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை அழிப்பது தொடர் கதையாகி உள்ளது இதன் தொடர்ச்சியாக, கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பகல் நேரத்திலேயே 2…


Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button