
திண்டுக்கல் மாவட்ட SP ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர் DSP கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது திருச்சி ரோடு கல்லறை மேடு அருகே கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய திண்டுக்கல் தண்டல்காரன் பட்டியை சேர்ந்த பாலாஜி,சுந்தர், மருதராஜ் திண்டுக்கல் YMR-பட்டியை சேர்ந்த கௌதம், சக்திவேல்(எ) முட்டக்கண் சக்திவேல், விக்னேஸ்வரன்(எ)விஷ்வா ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
