கோக்கு மாக்கு
Trending

தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை திருவொற்றியூர் தாங்கல் மற்றும் பீர்ப பயில்வான் தர்காசாலை தியாகராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர் ஆனால் தொலைபேசியை எடுக்காததால் மின்சாரம் இன்றி தவித்த பொதுமக்கள் திருவொற்றியூர் எண்ணூர் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து திருவொற்றியூர் ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் உடனடியாக எங்களுக்கு மின்சார வேணும் வர ஏற்பாடு செய்தால் நாங்கள் சாலை மறியலில் கைவிடுவதாகவும் பொதுமக்கள் அறிவுறுத்தினர் இதனை தொடர்ந்து போலீசார் மின்சார வாரிய பொறியாளர்களுக்கு தகவல் தெரிவித்து மின்சாரம் வர ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலில் இருந்து கைவிடப்பட்டனர் சாலை மறியலில் ஈடுபட்டதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது வடசென்னை பகுதியில் தொடர்ந்து மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதால் ஆங்காங்கே சாலை மறியல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button