தடை ஏதுமில்ல. கரன்ஸி இருந்தால்..
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் நீர் வரத்து அதிகமாவதால் அவ்வப்போது குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது
ஆனால் கரன்ஸி இருப்பவர்களுக்கு தடைஏதுமில்லை
ஐந்தருவி அருகே உள்ள தனியார் அருவியில் குளிக்க நபர் ஒருவருக்கு ஐநூறு என்றும் கார் வேன் போன்ற வாகனங்களில் வரும் சுற்றுலாவாசிகளிடம் ஐந்தாயிரம் வரை வசூல் செய்து வருவதாக தகவல்
தென்காசி மாவட்டத்தின் முக்கிய வருவாய் இந்த சீசனில்வரும் சுற்றுலா பயணிகளால் உருவாகும் வருவாயை தவிர
வேறு ஒன்றும் சொல்லும் படியாக இருக்காது
மாவட்ட நிர்வாகத்திற்க்கு (அரசுக்கு) வரும் வருமானத்தை விட அதிக வருவாய் தனியார் அருவிகளுக்கு வருகிறது
இதற்க்கு போலீசார் பாதுகாப்பு வேற…
என்னத்த சொல்றது
மாவட்ட நிர்வாகம் இது போன்ற தனியார் அருவிகளுக்கு வரும் வருவாயை கணக்கீடு செய்து தெருக்கள் சாலைகள் மின் விளக்குகள் பராமரிப்புன்னு ஏதாவது அவர்களிடம் செய்ய சொன்னால் மக்களுக்கு பயனாக இருக்கும்
மாவட்ட நிர்வாகம் தனியார் அருவிகளின் செயல்பாடுகளை கண்காணித்து
உரிய நடவடிக்கை எடுத்தால் நலம் என கருத்துக்களை தெரிவிக்கின்றனர் சுற்றுலாவாசிகளும் உள்ளூர் வாசிகளும்
மாவட்ட நிரவாகத்தின் அதிரடி நடவடிக்கைதான்
சுற்றுலாவாசிகளின் பர்சை பாதுகாக்கும்