கோக்கு மாக்கு

நத்தத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டிருந்த இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்,வேம்பார்பட்டி, கோபால்பட்டி,சிலுவத்தூர் ,செந்துறை, மணக்காட்டூர், சிறுகுடி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.

அதன் பேரில் நத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், வேலுமணி, சிறப்பு- சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஏட்டு மணிகண்டன் உள்ளிட்ட போலீசார்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நத்தம் காவல்நிலைய முன்பு சோதனை செய்ததில் சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரிடம், போலீசார் விசாரணை செய்தனர்.

இதில், அவர்கள், வடமதுரை-அம்மாபட்டியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 23),செந்துறை- களத்துப்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி (வயது 27) என்பதும், இருசக்கர வாகனங்களை திருடியதும் விசாரணையில்  தெரியவந்தது. அதன் பேரில் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 6 இருசக்கர வாகனம், 2 ஸ்கூட்டி வாகனங்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நத்தம் செய்தியாளர்: வசந்தசித்தார்த்தன்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button