கோக்கு மாக்கு

புதுக்கோட்டையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய வாலிபர் சங்கத்தினர் பாடைகட்டி போராட்டம்

இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் இந்திய வாலிபர் சங்கத்தினர் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி
நீட் தேர்வுக்கு பாடைகட்டி ஊர்வலமாக கீழராஜ வீதியில் இருந்து அண்ணாசிலை நோக்கிவந்தனர்.
அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலையில் அமர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

காவல்துறையினர் அனுமதி இல்லாமல்ஊர்வலம் நடத்தியதாலும் போராட்டத்திற்கு வந்த மாணவர்கள் பலர் முக கவசம் அணியாததால் மாணவர்களை கலைந்து போகச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினர் .
பின்னர் மாணவர்கள் நீட் தேர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்
கண்டன கோஷமிட்டனர் சிறிது நேரத்தில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் பாடைகட்டி போராட்டம் செய்ததால் அந்தப் பகுதியில்
சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button