கோக்கு மாக்கு

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவததை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி கோட்ட எஸ் ஆர் எம் யு ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காரைக்குடி கோட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார் துணை செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார் கோட்ட துணை செயலாளர்கள் சுந்தர் கணேசன் ஜெயராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்

ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். 55 வயது நிரம்பிய வரை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் தொழிலாளர் விரோத போக்கை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யு காரைக்குடி கேட்ட தொழிலாளர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button